வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி
சென்னை: வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் 10-ம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் மெட்ரிகுலேசன், ஸ்டேட் போர்டு, ஓ.எஸ்.எல்.சி., ஆங்கிலோ இந்தியன் என்று 4 கல்வி முறைகள் இருந்து வருகின்றன. வரும் கல்வியாண்டில் இவை அனைத்தும் ஒழி்ககப்பட்டு சமச்சீர் கல்வி முறை நடைமுறைக்கு வருகிறது.
தமிழக அரசு 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி என்னும் புதிய திட்டத்தை கடந்த ஆண்டு கொண்டு வந்தது. வரும் கல்வியாண்டில்(2011-2012) இத்திட்டம் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அமல்படுத்தப்படுகிறது.
அதாவது ஏற்கனவே நடைமுறையில் உள்ள மெட்ரிகுலேசன் முறை, மாநில கல்வி முறை, ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் முறை (ஓ.எஸ்.எல்.சி.) ஒழிக்கப்பட்டு இனி ஒரே தேர்வு முறை தான்.
இந்த 4 முறைகளில் ஓரியண்டல் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் மிக மிக குறைவாகத் தான் உள்ளன. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தான் அதிகம். பல மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சி.பி.எஸ்.சி. என்ற மத்திய அரசின் கல்விமுறைக்கு மாறி வருகின்றன. காரணம் சமச்சீர் கல்வி கொண்டுவரப்படுவதால் நடுத்தர மக்கள் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மெட்ரிகுலேசன் தேர்வுகள் முடிவடைந்தன. இனி வரும் கல்வியாண்டு முதல் ஒரே தேர்வு முறைதான்.












Click it and Unblock the Notifications