தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் மத்திய ரிசர்வ் படைகளை அனுப்ப ஜெ கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: தேர்தலின்போது வன்முறை சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் மத்திய ரிசர்வ் படைகளை அனுப்ப வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வி உறுதி என்பதை அறிந்த முதல்வர் கருணாநிதி, பண பலம், படை பலம், அதிகார பலம் ஆகியவற்றின் மூலம் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

கோவை மாவட்டம், மடத்துக்குளம் தொகுதிக்குட்பட்ட உடுக்கம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க தி.மு.க. அரசின் அமைச்சர் சாமிநாதன் ஏற்பாடு செய்து இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அதிமுகவினர் அந்த வீட்டினை முற்றுகையிட்டதுடன், தேர்தல் அதிகாரிக்கும், காவல் துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

மடத்துக்குளம் தொகுதியின் அதிமுக வேட்பாளர் சி. சண்முகவேலு அவர்களும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். இந்தத் தருணத்தில் திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் வீட்டிலிருந்து தி.மு.கவினர் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் சண்முகவேலு மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுகவினர் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அந்தப் பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

அ.தி.மு.க. திருப்பூர் மாவட்டக் கழகச் செயலாளர் மற்றும் மடத்துக் குளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமாகிய சண்முக வேலு மற்றும் கழக உடன் பிறப்புகள் பலர் மீது தி.மு.கவினர் நடத்தியுள்ள கொலை வெறித் தாக்குதலுக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்படி கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த அன்புச் சகோதரர் சண்முக வேலு பூரண நலமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்தத் தாக்குதலுக்கு காரணமான அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட தி.மு.கவினரை கைது செய்ய தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இது மட்டுமின்றி, பென்னாகரம் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக தி.மு.கவினர் ஈடுபட்டதை சுட்டிக்காட்டிய தே.மு.தி.க. கிளைச் செயலாளர் அசோகனை தி.மு.கவினர் உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலையே செய்துள்ளனர். தி.மு.கவினரின் இந்த கொலை வெறியாட்டத்திற்கும் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இதில் சம்பந்தப்பட்ட தி.மு.கவினரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இந்த வன்முறை வெறியாட்டத்தில் மரணமடைந்த தே.மு.தி.க. கிளைச் செயலாளர் அசோகனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தற்போது நிகழ்த்தப்பட்டு வரும் வன்முறைகளை கருத்தில் கொண்டு, தமிழ் நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் போதுமான மத்திய ரிசர்வ் படைகளை அனுப்பி, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், வாக்காளர்கள் அனைவரும் அச்சமின்றி சுதந்திரமாகவும், நேர்மையாகவும் வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையத்தையும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியையும், காவல் துறையையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+