காந்தஹாருக்கு இந்திய விமானம் கடத்தப்பட்ட வழக்கு-முக்கியப் புள்ளி சிலியில் கைது

1999ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி 150 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் காத்மாண்டுவிலிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கிளம்பியபோது அதை தலிபான் தீவிரவாதிகள் கடத்தினர். முதலில் பாகிஸ்தானுக்கும் பின்னர் அங்கிருந்து ஆப்கானிஸ்தானின் காந்தஹாருக்கும் கடத்திச் செல்லப்பட்டது.
விமானத்தை விடுவிக்க அவர்கள் பேசிய பேரத்தைத் தொடர்ந்து அப்போதைய வாஜ்பாய் அரசு பணிந்தது. அதன் விளைவாக ஜெய்ஸ் இ முகம்மது அமைப்பின் தலைவன் மெளலானா மசூத் அசார் உள்ளிட்ட 3 முக்கியத் தீவிரவாதிகளை இந்திய அரசு விடுவித்தது.
ஆறு நாட்கள் நீடித்த இந்த விமானக் கடத்தல் சம்பவம் அப்போது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விமானக் கடத்தல் தொடர்பாக சிபிஐ தாக்கல்செய்த குற்றப்பத்திரிக்கையில் அப்துல் ராஃப் என்ற பாகிஸ்தான் நபரை முக்கியக் குற்றவாளியாக தெரிவித்திருந்தது. விமானக் கடத்தல்காரர்களுக்கு நிதியுதவி செய்த நபர்களில் இந்த ராஃப்பும் ஒருவர். இவன், மசூத் அஸாரின் மச்சான் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரைப் பற்றியத் தகவல் கொடுத்தாலோ அல்லது பிடித்துக் கொடுத்தாலோ ரூ. 10 லட்சம் பரிசு தரப்படும் என்றும் சிபிஐ அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த ராஃப் பிடிபட்டுள்ளான்.
காந்தஹார் சம்பவத்திற்குப் பின்னர் ராஃப் எங்கும் தென்படவில்லை. ஆனால் கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம், தலிபான் தீவிரவாதிகளால் ராவல்பிண்டியில் 42 பேர் பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டக் குழுவில் இந்த ராஃபும் இடம் பெற்றிருந்தான். இதன் மூலம் பாகிஸ்தான் அரசுக்கும், ராஃபுக்கும் இடையே தொடர்பு இருப்பது வெளிப்படையாக தெரிய வந்தது.
இந்த நிலையில் தற்போது சிலியில் வைத்து ராஃப் பிடிபட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதையடுத்து பிடிபட்டுள்ள ராஃப் தாங்கள் தேடும் நபர்தானா என்பதை உறுதி செய்வதற்காக சிபிஐ குழு சிலி விரைகிறது. சிபிஐ குழுவுடன் ரா குழுவைச் சேர்ந்தவர்களும் செல்கின்றனர்.
போலி விசா மூலம் ராஃப் சிலிக்கு வந்ததாக தெரிகிறது. அப்போது இன்டர்போல் போலீஸ் உஷார்படுத்தியதைத் தொடர்ந்து ராஃப் பிடிபட்டான்.
கடந்த 2005ம் ஆண்டு ராஃப்பின் புகைப்படத்தைக் கொடுத்து விசாரணைக்கு உதவுமாறு அமெரிக்காவைக் கோரியிருந்தது இந்தியா என்று சமீபத்தில் வெளியான விக்கிலீக்ஸ் ரகசிய ஆவண வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அமெரிக்காவின் வசம் சிக்கியிருந்த ஆப்கானிஸ்தானில் முன்பு ஆட்சியை கையில் வைத்திருந்த தலிபான் அரசின் முன்னாள் விமானப் போக்குவரத்து அமைச்சர் மன்சூர் அக்தர், தலிபான் அமைப்பின் காந்தஹார் படைப் பிரிவின் தலைவராக இருந்த அக்தர் உஸ்னானி என்பவரை விசாரிக்க தங்களை அனுமதிக்குமாறும் இந்தியா கோரியிருந்தது. ஆனால் வழக்கம் போல தீவிரவாதம் தொடர்பானவற்றில் இரட்டை வேடம் போடும் அமெரிக்கா இந்தியாவின் இக்கோரிக்கைகளை இதுவரை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications