பிறந்த நாள் பரிசு வழக்கு: ஜெ. மனு தள்ளுபடி... நேரில் ஆஜராக உத்தரவு!

ஜெயலலிதாவுக்கு எதிரான பிறந்தநாள் பரிசு வழக்கு சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என ஜெயலலிதா, செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மனு செய்திருந்தனர்.
இந்த மனுக்களை சில ஆண்டுகளாக விசாரித்து வந்த நீதிமன்றம் அவற்றின் மீது ஏப்ரல் 9-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, அந்த மனுக்கள் மீதான அடுத்தக்கட்ட விசாரணை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மனுதாரர், சி.பி.ஐ. என இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பழனிச்சாமி சம்பந்தப்பட்ட அந்த மூன்று பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அவர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்காக, அவர்கள் மூவரும் மே 11-ம் தேதி நீதிமன்றத்துக்கு வர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications