அதிமுகவில் இணைந்த நாகர்கோவில் திமுக எம்.எல்.ஏ.ராஜன்
நாகர்கோவில்: தேர்தலில் சீட் கிடைக்காததால் நாகர்கோவில் திமுக எம்.எல்.ஏ. ராஜன் நேற்றிரவு அதிமுகவில் இணைந்தார்.
நாகர்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ராஜன். அவர் திமுக சட்ட திட்ட திருத்தக்குழுவின் மாநில உறுப்பினர். கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நாகர்கோவிலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலிலும் தனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால் நாகர்கோவில் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர். மகேஷ் அறிவிக்கப்பட்டார். இதனால் ராஜன் ஏமாற்றம் அடைந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு அவர் அதிமுக அமைப்பு செயலாளர் என்.தளவாய்சுந்தரம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்த நிகழ்ச்சி ராஜன் வீட்டில் நடந்தது. அப்போது ராஜனுக்கு தளவாய்சுந்தரம் சால்வை அணிவித்து கட்சிக்கு வரவேற்றார்.இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளர் நாஞ்சில் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications