கோவை கலெக்டர் அலுவலகத்தில் தீ: ஆன்லைன் தொடர்பு துண்டிப்பு
Subscribe to Oneindia Tamil
கோயமுத்தூர்: கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ஆட்சியர் மற்றும் மாவட்டத்துக்கு உட்பட்ட வருவாய் ஆட்சியர்களின் அலுவலகங்களுக்கு இடையிலான ஆன்லைன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எல்காட் அலுவலக அறையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டத்துக்கு உட்பட்ட வருவாய் ஆட்சியர்களின் அலுவலகங்களுக்கு இடையிலான ஆன்லைன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
தேர்தலுக்காக பிரத்யேகமாக என்ஐசி மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்தால் தேர்தல் பணிகளில் பாதிப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொறியாளர்கள் கோளாறைச் சரிசெய்து வருகின்றனர். இந்த தீ விபத்தால் ஆட்சியர் அலுவலகம் இருண்டு காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications