சட்டசபை தேர்தல்: காஞ்சியில் 1391 பேர் ‘49 ஓ' போட்டனர்
காஞ்சிபுரம்: கடந்த 13-ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலின்போது யாருக்கும் வாக்களிக்க விரும்பாத காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்து 391 பேர் 49 ஓ போட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொகுதி வாரியாக 49 ஓ போட்டவர்கள் விவரம்,
சோழிங்கநல்லூர்-273
ஆலந்தூர்-197
ஸ்ரீபெரும்புதூர்-29
பல்லாவரம்-175
தாம்பரம்-276
செங்கல்பட்டு-158
திருப்போரூர்-3
செய்யூர்-50
மதுராந்தகம்-87
உத்தரமேரூர்-56
காஞ்சிபுரம்-37
காஞ்சிபுரம் மாமல்லன் நகர் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியொன்றில் 49ஓ போடுவதற்கு தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று வாக்காளர்கள் சிலர் புகார் தெரிவித்தனர்.
இதேபோன்று மேலும் ஒரு சில வாக்குச்சாவடிகளில் அனுமதிக்கப்படாத நிலையிலேயே ஆயிரத்து 391 பேர் 49 ஓ போட்டுள்ளனர். மக்கள் ஆர்வமாக வாக்களித்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் வேளையில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகத் தான் உள்ளது.












Click it and Unblock the Notifications