சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன சுயம்வரம் நிகழ்ச்சி
சென்னை: சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கு என சிறப்பு சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500 மணமகன், மணமகள்கள் கலந்து கொண்டு தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்தனர்.
இந்த நவீன சுயம்வரம் நிகழ்ச்சி கடந்த 3 நாட்களாக சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் மணமகன், மணமகள் தேடி 500 மாற்றுத் திறனாளிகள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
சுயம்வரத்தில் கலந்து கொண்டவர்களின் பெயர் மற்றும் விவரங்களை சங்கத் தலைவர் என்.ரவி அறிவிக்க, ஒவ்வொருவராக மேடைக்கு வந்து தங்களுக்கு எப்படிபட்ட வரன் வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தனர்.
பெரும்பாலான பெண்கள் எனது கணவர் ஊனமுற்றவராக இருந்தாலும், எந்த மதத்தை-ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை, நல்ல மனம் உள்ளவராக இருக்க வேண்டும், காலமெல்லாம் என்னை அன்போடு அன்போடு பார்த்துக்கொண்டால் போதும் என்றனர்.
சுயம்வரத்தில் ஒருவரையொருவர் அறிமுகம் செய்துகொண்ட பின்னர் அவர்களின் பெற்றோர் தங்களுக்கு பிடித்த மணமகன், மணமகள் குடும்பத்தினரோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பலர் தங்களுக்கு விருப்பமானவர்களை தேர்வு செய்து மகிழ்வோடு திரும்பிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications