அமெரிக்காவில் புயலுக்கு 22 பேர் பலி: மீட்பு பணி தீவிரம்
சிகாகோ: அமெரிக்காவில் வீசும் சூறாவளியில் சிக்கி 22 பேர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர்.
அமெரி்க்காவின் தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் கடந்த 3 நாட்களாக பலத்த சூறாவளி வீசி வருகிறது. இந்தப் புயலால் மரங்கள் வேரோடு விழுந்தன. மேலும், வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன, மின் வயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் புயல் வீசும் பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளன.
அர்கன்சாஸ் பகுதியில் 7பேர் உயிர் இழந்தனர். இதில் மூன்று பேர் 7 வயதுக்குட்பட்ட குழந்தைகள். வடக்கு கரோலினாவில் 5 பேரும், அலபாமாவில் ஒருவரும், வாஷிங்டன் கவுன்டியில் 6 பேரும், ஒகலாமாவில் 2 பேரும், கிரீன் கவுன்டியில் ஒருவரும் பலியாகினர்.
புயல் மரங்களை எல்லாம் வேரோடு பெயர்த்தெடுத்து காற்றில் பந்தாடும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக உள்ளது. இந்த கடும் புயலால் போக்குவரத்து முடங்கியுள்ளது. புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications