6 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு: வீரப்பன் மனைவி முத்துலட்சுமி விடுதலை

1993-ம் ஆண்டு மே மாதம் 24-ந்தேதி அப்போதைய சாம்ராஜ்நகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த கோபால் பி.ஹொசூர் தலைமையிலான போலீசார் ஒரு ஜீப்பில் துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு மாதேஸ்வரன் மலையில் இருந்து கொள்ளேகால் நோக்கிச் சென்று கொண்டு இருந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மாதேஸ்வரன் மலையில் காத்திருந்த வீரப்பனும் கூட்டாளிகளும் சேர்ந்து போலீஸ் ஜீப் மீது சரமாரியாக சுட்டனர்.
6 போலீசார் சாவு
இந்த திடீர் தாக்குதலில் ஜீப்பில் வந்த போலீஸ்காரர்கள் உத்தப்பா, மாஞ்சய்யா, உவவ்யா, பிரபாகர், சுவாமி மற்றும் ஜீப் டிரைவர் நரசப்பா ஆகிய 6 பேர் அதே இடத்தில் இறந்தனர். போலீஸ் சூப்பிரண்டு கோபால் பி.ஹொசூர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
பின்னர் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் போலீஸ் ஜீப்பில் இருந்த துப்பாக்கிகளை கொள்ளையடித்துக்கொண்டு காட்டுக்குள் தப்பி ஓடினர்.
முத்துலட்சுமி விடுதலை
இந்த சம்பவம் குறித்து மாதேஸ்வரன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவத்தின் போது வீரப்பனுடன் அவனது மனைவி முத்துலட்சுமி மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த பாப்பாத்தி ஆகியோரும் உடன் இருந்ததாகக் கூறி அவர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை சாம்ராஜ்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்று இந்த வழக்கில் நீதிபதி ஏ.சி.வித்யாதர் தீர்ப்பளித்தார்.
அதில், முத்துலட்சுமி மற்றும் பாப்பாத்தி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. எனவே இந்த வழக்கில் இருந்து முத்துலட்சுமி, பாப்பாத்தி 2 பேரையும் விடுதலை செய்கிறேன் என்று கூறினார்.
பாலாறு குண்டு வெடிப்பு வழக்கிலும் விடுதலை
ஏற்கனவே பாலாறு குண்டு வெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முத்துலட்சுமி உள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் முத்துலட்சுமிக்கும், பாப்பாத்திக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதால் விடுதலை செய்யப்படாமல் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தற்போது இந்த வழக்கிலும் முத்துலட்சுமி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் சிறையிலிருந்து வெளியில் வருகிறார்.
முத்துலட்சுமியை விடுதலை செய்ய வேண்டும் என ஏற்கெனவே பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications