ஆண் குழந்தைக்கு அப்பாவானார் செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்

Subscribe to Oneindia Tamil

Viswanathan Anand
சென்னை: இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தந்தையாகியுள்ளார். அவரது மனைவி அருணா கடந்த 9ம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

சத்தமின்றி சதுரங்கப் போட்டிகளில் வெற்றி மேல் வெற்றி பெறுபவர் தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த். அவருக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் கழித்து தற்போது குழந்தை பிறந்துள்ளது. அவரது மனைவி அருணா கடந்த 9ம் தேதி காலை 6.35 மணிக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த செய்தி உறவினர்களுக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும் மட்டும் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து அருணா கூறியதாவது,

எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனந்த் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார். எங்கள் குழந்தைக்கு அகில் என்று பெயர் வைக்கவிருக்கிறோம். இது எங்களுக்கு புதிய அனுபவம் என்றார்.

ஆனந்த் கடந்த 1996ம் ஆண்டு ஜூலை மாதம் அருணாவை மணந்தார். தற்போது 14 ஆண்டுகள் கழித்து பெற்றோரான சந்தோஷத்தில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+