5 நாள் சுற்றுப்பயணமாக பிரதீபா பட்டீல் இன்று மொரீஷியஸ் செல்கிறார்
டெல்லி: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் 5 நாள் பயணமாக இன்று மொரீஷியஸ் செல்கிறார்.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று முதல் 5 நாட்களுக்கு மொரீஷியஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் ஆங்கியோர் பிரதீபா பாட்டீலை வழியனுப்பி வைத்தனர். அவருடன் 57 தொழில் அதிபர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவும் செல்கிறது.
இந்த சுற்றுப்பயணத்தின்போது அவருக்கு மொரீஷியஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.
பிரதீபா பாட்டீல் மொரீஷியஸ் அதிபர் சர் அன்ரோட் ஜுகுநாத், பிரதமர் நவின்சந்திர ராமகோலம் ஆகியோரை சந்தி்த்து தீவிரவாதம், கடற்கொள்ளையர்கள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக மேம்பாடு பற்றியும் ஆலோசிக்கிறார். மொரீஷியஸ் நாட்டு எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோரையும் அவர் சந்தித்து பேசுகிறார்.
பிரதீபா பாட்டீல் மொரீசியஸ் நாட்டு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துகிறார். இந்திய-மொரீஷியஸ் நாட்டு தொழில் அதிபர்கள் கூட்டத்திலும் கலந்து கொள்கிறார்.
இந்த பயணத்தால் இரு நாடுகளுக்கிடையே உள்ள நல்லுறவு மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications