சாய்பாபா உடலுக்கு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: மறைந்த புட்டபர்த்தி சாய்பாபாவின் உடலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இன்று அஞ்சலி செலுத்தினர்.
இன்று மாலை இரு தலைவர்களும் டெல்லியிலிருந்து புட்டபர்த்தி வந்தனர். பின்னர் சாய்பாபா உடல் வைக்கப்பட்டுள்ள சாய் குல்வந்த் ஹாலுக்குச் சென்றனர். பின்னர் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டிக்கு அருகே அமர்ந்து அங்கு நடந்த இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதேபோல சாமியார் நித்தியானந்தாவும் சாய்பாபா உடலுக்கு அஞ்சலி செலுத்துவார் என்று அவரது மடத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சாய்பாபாவுக்கு பக்தர்கள் அஞ்சலி-படங்கள்












Click it and Unblock the Notifications