2 ஜி விவகாரம்: யூனிநார் நிறுவனத் தலைவர் சஞ்சய் சந்திரா ராஜினாமா!
Subscribe to Oneindia Tamil

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முக்கியமானவர்களில் ஒருவர் யூனிநார் நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் சந்திரா. நார்வே நாட்டின் டெலினார் மற்றும் இந்தியாவின் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் நிறுவனம் இது. யூனிடெக்கின் நிர்வாக இயக்குநரும் சஞ்சய் சந்திராதான்.
இப்போது 2 ஜி வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளதால், இன்று நடக்கும் இயக்குநர்கள் குழு கூட்டத்துக்கு தலைமை ஏற்கும் பொறுப்பை ஜெயேஷ் ஷா ஏற்றுள்ளார். யூனிடெக் வயர்லெஸின் இயக்குநர்களுள் இவரும் ஒருவர்.
சஞ்சய் வெளியில் வரும் வரை தலைமைப் பொறுப்புக்கு இவரையே நியமித்துள்ளது யூனிடெக் நிறுவனம். 2 ஜி வழக்கிலிருந்து சஞ்சய் வெளியில் வரும்வரை தலைமைப் பதவியில் ஜெயேஷ் ஷா தொடர்வார்.












Click it and Unblock the Notifications