சாய்பாபா மரணம் இயற்கை தான்: ஆந்திர அரசு
ஹைதராபாத்: சாய்பாபாவின் மரணம் இயற்கையானது தான் என்று ஆந்திர அரசு விளக்கம் அளித்துள்ளது.
கடந்த மாதம் 28-ம் தேதி சாய்பாபா உடல் நலக்குறைவால் சத்யசாய் மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டார். அன்று முதல் அந்த மருத்துவமனையின் இயக்குனர் சபாயா தினமும் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் சாய்பாபாவின் உறுப்புகள் சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறது. ஆனால் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றே கூறினார்.
இதனால் சாய்பாபாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் சந்தேகம் அடைந்த தலித் ஜனசபை அமைப்பு தலைவர் கரம் சந்த் கடந்த 18-ம் தேதி ஆந்திர மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்தார். இந்த விஷயத்தில் மனித உரிமை ஆணையம் தலையிட்டு சாய்பாபாவுக்கு உரிய சிகிச்சை அளிக்க வழி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதை மனித உரிமை ஆணையத்தின் தற்காலிக தலைவர் பெத்தபெரிரெட்டி விசாரித்தார். அவர் இது குறித்து விளக்கம் கேட்டு மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அதற்கு ஆந்திர அரசு சாய்பாபாவுக்குக நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக விளக்கம் அளித்தது. இந்நிலையில் சாய்பாபா கடந்த 24-ம் தேதி மரணம் அடைந்தார்.
இதையடுத்து மாநில மனித உரிமை ஆணையத்துக்கு சாய்பாபா மரணம் பற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது பற்றி ஏராளமான புகார்கள் வருகின்றன அதனால் மாநில அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று அது கேடடுக் கொண்டது.
இதற்கு ஆந்திர மாநில தலைமை செயலாளர் ரமேஷ் மனித உரிமை ஆணையத்தில் விளக்கம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
சாய்பாபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை மாநில அரசு அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். சாய்பாபாவின் மருத்துவ அறிக்கை முழுவதையும் நாங்கள் பார்த்து விசாரணை நடத்தினோம். அவரது சாவில் மர்மம் எதுவும் இல்லை. அவரது மரணம் இயற்கையானது தான். சில பக்தர்கள் சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர்கள் மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளையே கூறி வருகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications