கன மழை: மின்னல் தாக்கி டிரான்ஸ்பார்மர் வெடிப்பு- இருளில் 70 கிராமங்கள்
ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரத்தில் மின்னல் தாக்கி துணை மின் நிலைய டிரான்பார்மர் வெடித்து சிதறியது. இதனால் 70-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் கோடை வெப்பம் தனிந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நேற்றிரவு 7 மணிக்கு திடீரென ஓட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் இடைவிடாமல் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி ஓட்டப்பிடாரம் துணை மின் நிலைய டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது.
சுமார் 30 அடி உயரத்திற்கு தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் துணை மின் நிலையத்தில் இருந்து மின் சப்ளை பெரும் 70-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி பொறியாளர் சித்தி வினாயக மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு உயரதிகாரிகள் மற்றும் சிப்காட் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications