கன மழை: மின்னல் தாக்கி டிரான்ஸ்பார்மர் வெடிப்பு- இருளில் 70 கிராமங்கள்
ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரத்தில் மின்னல் தாக்கி துணை மின் நிலைய டிரான்பார்மர் வெடித்து சிதறியது. இதனால் 70-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் கோடை வெப்பம் தனிந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நேற்றிரவு 7 மணிக்கு திடீரென ஓட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் இடைவிடாமல் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி ஓட்டப்பிடாரம் துணை மின் நிலைய டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது.
சுமார் 30 அடி உயரத்திற்கு தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் துணை மின் நிலையத்தில் இருந்து மின் சப்ளை பெரும் 70-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி பொறியாளர் சித்தி வினாயக மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு உயரதிகாரிகள் மற்றும் சிப்காட் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications