கொளுத்தும் கோடை...குளுகுளு தேசங்களில் ரெஸ்ட் எடுக்க கிளம்பினார் விஜயகாந்த்!
சென்னை: தேர்தல் பயணக் களைப்பு, தமிழகத்தில் நிலவும் கடும் கோடை வெப்பம் போன்றவற்றால், குளுகுளு பிரதேசங்களான லண்டன், இத்தாலி போன்ற நாடுகளுக்கு 13 நாள் டூர் போகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார். ஓய்வின்றி அவர் பிரசாரம் செய்ததால் தொண்டைவலி ஏற்பட்டது.
கடந்த சில தினங்களாக வீட்டிலேயே அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் ஓய்வெடுக்க விஜயகாந்த் வெளிநாடு செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் செல்கிறார். லண்டன், இத்தாலி என ஐரோப்பாவின் குளுகுளு தேசங்களுக்கு அவர் இம்முறை செல்வதகாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் குடும்பத்துடன் செல்லும் . தேர்தல் முடிவுக்கு ஒரு நாள் முன்னதாக (12-ந் தேதி) அவர் சென்னை திரும்புகிறார்.
இவரது கூட்டணியின் தலைவியான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் தனது தோழி சசிகலாவுடன் கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications