For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அருணாச்சல் முதல்வருடன் மாயமான ஹெலிகாப்டர்-பூடானில் தரையிறங்கியது

By Chakra
Google Oneindia Tamil News

Dorjee Khandu
இடாநகர்: அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜீ காண்டூவை ஏற்றிக் கொண்டு சென்ற ஹெலிகாப்டர் காணாமல் போன நிலையில் அது பத்திரமாக பூடானில் தரையிங்கியுள்ளது.

வானிலை மோசமாக இருந்ததால் அந்த ஹெலிகாப்டர் பூடானுக்குத் திருப்பப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

இன்று காலை 9.45 மணிக்கு அருணாலப் பிரதேசத்தின் தவாங் நகரில் இருந்து பவன் ஹான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டரில் கிளம்பினார் டோர்ஜீ. இந்த ஹெலிகாப்டர் 11.30 மணிக்கு தலைநகர் இடாநகருக்குக் வந்து சேர்ந்திருக்க வேண்டும்.

ஆனால், இடையிலேயே அந்த ஹெலிகாப்டருனான தொடர்பு அறுந்துபோனது.
இதனால் அது விபத்துக்குள்ளானதாக அஞ்சப்பட்டு அதை தேடும் பணியில் விமானப் படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுதப்பட்டன.

இந் நிலையில் வானிலை மோசமானதால் ஹெலிகாப்டர் பூடானில் டபோர்ஜிஜோ பகுதியில் தரையிறக்கப்பட்டுள்ளதாக முதல்வரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் அருணாசலப் பிரதேசத்தில் 23 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அதில் பயணம் செய்த இரு குழந்தைகள் உள்பட 17 பேர் பலியானதும், அதில் ஒரு பெண்ணும், குழந்தையும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் நினைவுகூறத்தக்கது.

English summary
Pawan Hans chopper carrying Arunachal Pradesh Chief Minister Dorjee Khandu has goes missing while flying from Tawang. A search party is out looking for the missing chopper. The chopper was supposed to land in Guwahati at 11.30 am.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X