அருணாச்சல் முதல்வருடன் மாயமான ஹெலிகாப்டர்-பூடானில் தரையிறங்கியது
வானிலை மோசமாக இருந்ததால் அந்த ஹெலிகாப்டர் பூடானுக்குத் திருப்பப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
இன்று காலை 9.45 மணிக்கு அருணாலப் பிரதேசத்தின் தவாங் நகரில் இருந்து பவன் ஹான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டரில் கிளம்பினார் டோர்ஜீ. இந்த ஹெலிகாப்டர் 11.30 மணிக்கு தலைநகர் இடாநகருக்குக் வந்து சேர்ந்திருக்க வேண்டும்.
ஆனால், இடையிலேயே அந்த ஹெலிகாப்டருனான தொடர்பு அறுந்துபோனது.
இதனால் அது விபத்துக்குள்ளானதாக அஞ்சப்பட்டு அதை தேடும் பணியில் விமானப் படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுதப்பட்டன.
இந் நிலையில் வானிலை மோசமானதால் ஹெலிகாப்டர் பூடானில் டபோர்ஜிஜோ பகுதியில் தரையிறக்கப்பட்டுள்ளதாக முதல்வரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் அருணாசலப் பிரதேசத்தில் 23 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அதில் பயணம் செய்த இரு குழந்தைகள் உள்பட 17 பேர் பலியானதும், அதில் ஒரு பெண்ணும், குழந்தையும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் நினைவுகூறத்தக்கது.