அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு கேள்வித்தாள் லீக்-தேர்வு தாமதம்
டெல்லி: அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுக்கான கேள்வித்தாள் இன்று உ.பி. மாநிலத்தில் முன்கூட்டியே வெளியாகி விட்டதால், நுழைவுத் தேர்வு தொடங்குவது சில மணி நேரம் தள்ளி வைக்கப்பட்டு பிற்பகலில் தொடங்கியது.
இன்று காலை 9.30 மணிக்கு நாடு தழுவிய அளவில் அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு (AIEEE) நடைபெறுவதாக இருந்தது. இரு தாள்களைக் கொண்டது இந்தத் தேர்வு. காலை 9.30 மணிக்கு முதல் தாளுக்கான தேர்வும், பிற்பகல் 2 மணிக்கு 2வது தாளுக்கான தேர்வும் தொடங்குவதாக இருந்தது.
இந்த நிலையில் உ.பி. மாநிலத்தில் கேள்வித்தாள் முன்கூட்டியே லீக் ஆகி விட்டதாக தகவல் பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தேர்வுகளை தள்ளிப் போட்டது மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம். அதன்படி, காலை தொடங்குவதாக இருந்த முதல் தாளுக்கான தேர்வு பிற்பகல் 12 மணிக்கும், 2வது தாளுக்கான தேர்வு இரவு 7 மணிக்கும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் கிட்டத்தட்ட 12 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதற்காக 80 நகரங்களில் 1600 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தேர்வு ஆன்லைனிலும் நடைபெறுகிறது. அதை 1 லட்சம் பேர் எழுதவுள்ளனர்.












Click it and Unblock the Notifications