தன்னாட்சி பெற்ற அணு ஒழுங்குமுறை ஆணையம்- மசோதா தாக்கலாகிறது
நெல்லை: அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்திற்கு பதிலாக தன்னாட்சி பெற்ற அணு ஓழுங்கு முறை ஆணையம் உருவாக்குவதற்கான மசோதாவை அடுத்த பாராளுமன்ற கூட்டதொடரில் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து இந்திய அணுசக்தி கழகத்தின் கூடன்குளம் அணுமின் நிலையம் வெளியிட்ட செய்திகுறிப்பு, ஜப்பான் நாட்டின் புகுசி்மா அணு உலையில் ஏற்பட்ட கதிர்வீச்சு சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவில் அணுசக்தி திட்டத்தின் பாதுகாப்பு அம்சங்கள், மகாரஷ்டிரா மாநிலம் ஜைதாபூர் அணு உலையின் தற்போதைய நிலை தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், இந்திய அணுசக்தி கழக தலைவர் ஜெயின், மகாராஷ்டிரா மாநில முதல்வர் பிருதிவிராஜ் சவுகான் ஆகியோருடன் பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் ஜைதாபூரில் 165 மெகா வாட் மின் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைக்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அணு உலை அமைப்பதற்கான சுற்று சூழல் அனுமதி அனைத்தும் வெளிப்படையாக மேற்கொள்ளப்படும். இந்த இரண்டு உலைகளும் 2019ம் ஆண்டு மின் உற்பத்தி செய்யும். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.
தற்போதுள்ள அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்திற்கு பதிலாக இந்திய அணு ஒழுங்கு முறை ஆணையம் தன்னாட்சி அந்தஸ்த்துடன் செயல்படுவதற்கான மசோதா வருகின்ற பாராளுமன்ற கூட்ட தொடரில் கொண்டு வரப்படும்.
அணு உலைகளின் உயர்மட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்திய அணுசக்தி ஆணையத்தின் பாதுகாப்பு ஆய்வு குழுவை மத்திய அரசு கேட்டுக் கொள்ளும். அணு உலைக்கான உதிரி பாகங்கள், தொழில்நுட்பங்கள் உள்நாட்டில் தயாரிப்பாக இருந்தாலும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும் இந்திய அணுசக்தி ஒழுங்கு முறையின் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கி இருக்க வேண்டும். அணுசக்தி திட்டத்தில் வெளியப்படையான அணுகுமுறை கடைப்பிடிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications