நெல்லை-வாக்கு எண்ணும் மைய ஜன்னல்களின் படங்களை அனுப்ப உத்தரவு!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களை புகைப்படம் எடுத்து அனுப்ப தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் கடந்த 13ம்தேதி 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று வாக்குகள் பதிவான மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு கருதி வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் ஜன்னல் கதவுகளை படம் பிடித்து அனுப்பும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களான நெல்லை அரசு பொறியியல் கல்லூரி, குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி, புளியங்குடி எஸ் வீரசாமி செட்டியார் கல்லூரி ஆகியவற்றில் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் ஜன்னல்களை புகைப்படம் எடுத்து அனுப்பும்படி நெல்லை கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து தொகுதிகளின் வாக்கு பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளின் ஜன்னல்களை போலீசார் புகைப்படம் பிடித்து அவசர அவசரமாக மாவட்ட நிர்வாகத்து அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications