அமெரிக்கர்கள் உற்சாகம்: பாகிஸ்தானில் அதிர்ச்சி

அமெரிக்க தேசியக் கொடியை ஏந்தியபடி மக்கள் சாலைகளிலும், சதுக்கங்களிலும் கூடி நின்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வெள்ளை மாளிகைக்கு வெளியே கூடி ஏராளமான அமெரிக்கர்கள் தேசியக் கொடிகளுடன் கூடி நின்று அமெரிக்கப் படைகளையும் அதிபர் ஒபாமாவையும் வாழ்த்தி கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
பாகிஸ்தானில் அதிர்ச்சி:
உலகையே குலுங்க வைத்த பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானுக்குள் பதுங்கியிருப்பதாக பலமுறை அமெரிக்கா சொல்லி வந்தது. இதை பாகிஸ்தான் அரசுத் தரப்பும், ராணுவத் தரப்பும் தொடர்ந்து மறுத்து வந்தன.
ஆனால் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலேயே பின்லேடன் பதுங்கியிருந்தது பாகிஸ்தான் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்களுக்குப் பக்கத்திலேயே இத்தனை காலமாக பின்லேன் இருந்தது அவர்களை அதிர்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
மேலும் பின்லேடன் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தங்கியிருந்தது நிச்சயம் பாகிஸ்தான் அரசுக்கும், அதன் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.
மேலும் பின்லேடன் இருப்பிடம் குறித்து பாகிஸ்தான் தரப்பிலிருந்தே யாரேனும் காட்டிக் கொடுத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
குறிப்பாக அமெரிக்க நெருக்குதலால் பாகிஸ்தானின் உளவுப் பிரிவே, பின் லேடனை காட்டிக் கொடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications