அருணாச்சல் முதல்வர் காண்டூவின் நிலை தொடர்ந்து மர்மத்தில்
இடாநகர்: அருணாச்சல் பிரதேச முதல்வர் டோர்ஜீ காண்டூவுடன் சென்ற ஹெலிகாப்டர் என்ன ஆனது என்பது இதுவரை தெரியவில்லை. தொடர்ந்து ஹெலிகாப்டரைத் தேடும் பணி நடந்து வருகிறது.
தவாங் பகுதியிலிருந்து இடாநகருக்கு முதல்வர் டோர்ஜீ காண்டூ உள்ளிட்ட 5 பேருடன் கிளம்பிய பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர் திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமாகி விட்டது. அது என்ன ஆனது என்பது தெரியவில்லை. முதல்வர் உள்ளிட்டோரின் நிலை குறித்தும் பெரும் குழப்பம் நீடிக்கிறது.
ஹெலிகாப்டரைத் தேடும் பணி கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. ஆனால் இதுவரை ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
மோசமான வானிலை நிலவி வருவதால் தேடும் பணியில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. இருப்பினும் தற்போது மூ்ன்று இடங்களைக் குறி வைத்து பாதுகாப்புப் படையினர் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தரை மார்க்கமாகவும், வான் மார்க்கமாகவும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஈகிள்நெஸ்ட் பறவைகள் சரணாலயம், நாகஜான் பகுதிகளில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. அதேபோல பூட்டான் நாட்டில் உள்ள மோபி கிராமத்திலும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இஸ்ரோவின் செயற்கைக் கோள் படங்கள் மூலம் கிடைத்த சில முக்கியத் தகவல்களின் அடிப்படையில் இந்த மூன்று இடங்களில் மட்டுமே தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications