கொல்லப்பட்ட பின்லேடனின் புகைப்படம் போலியானது!

பின்லேடன் கொல்லப்பட்ட செய்தி உலகெங்கும் பரவியதுமே அவரது கொல்லப்பட்ட உடலைக் காண அனைவரும் ஆர்வமாக இருந்தனர். ஆனால் எங்குமே புகைப்படம் வெளியாகவில்லை. அமெரிக்காவும் புகைப்படத்தை வெளியிடவில்லை. பாகிஸ்தான் தரப்பிலும் வெளியிடவில்லை.
இந்த நிலையில் பாகிஸ்தான் டிவிக்களில்தான் முதல் முதலாக பின்லேடனின் படம் என்று கூறி ஒரு புகைப்படம் வெளியானது. அதில் பின்லேடன் போலத் தோற்றமளிக்கும் ஒரு முகம் இடம் பெற்றிருந்தது. மிகவும் கோரமாக சிதைக்கப்பட்ட நிலையில் அந்த முகம் காணப்பட்டது.
இதையடுத்து அனைவரும் இதுதான் கொல்லப்பட்ட பின்லேடனின் புகைப்படம் என்று கூறி பயன்படுத்த ஆரம்பித்தனர். ஆனால் அது போலியான புகைப்படம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
பின்லேடன் முகத்திற்கும், இந்த முகத்திற்கும் இடையே ஏகப்பட்ட வித்தியாசங்கள் தெரிகின்றன. தாடியில் நரை குறைவாக உள்ளது. நிஜத்தில் பின்லேடனுக்கு தாடியில் நரை நிறைய இருக்கும். இதுபோல சின்னச் சின்ன வித்தியாசங்கள் இருந்தன. இதையடுத்துஇந்த புகைப்படம் போலியானது என்பது உறுதியாகியுள்ளது.
போலியானதாக இருந்தாலும் இந்த நிமிடம் வரை இந்த புகைப்படம்தான் உலகெங்கும் வலைத்தளங்களில் வளைய வந்து கொண்டுள்ளது.
பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட படங்கள் எதையும் இதுவரை அமெரிக்க அரசோ, ராணுவமோ, அமெரிக்க இணையதளங்களோ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications