பின்லேடன் பலி-உஷாராக இருக்குமாறு அமெரிக்கர்களுக்கு அரசு அறிவுறுத்தல்
வாஷிங்டன்: பின்லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், உலக நாடுகளில் சுற்றுலா மேற்கொண்டுள்ள, வசித்து வருகிற அமெரிக்க குடிமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அமெரிக்க அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள பாதுகாப்பு எச்சரிக்கைச் செய்தியில், பின்லேடன் கொலையைத் தொடர்ந்து அமெரிக்கர்களுக்கு எதிரான தாக்குதல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
தற்போதைய சூழ்நிலை மிகவும் பதட்டமாக இருப்பதால், உலகெங்கும் வசிக்கும், சுற்றுலாவில் இருக்கும் அமெரிக்க குடிமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முடிந்தவரை வெளியில் சுற்றாமல் தங்களது வீடுகள், ஹோட்டல்களுக்குள்ளேயே அவர்கள் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மொத்தமாக கூடுவது போன்றவற்றை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல உலகெங்கும் உள்ள தனது தூதரகங்களுக்கும் பாதுகாப்பை அதிகரிக்குமாறு தூதரக தொடர்புகள் உள்ள நாடுகளை அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications