பைலட் ஸ்டிரைக்-சென்னையில் 23 விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி
Subscribe to Oneindia Tamil
ஆலந்தூர்: ஏர் இந்தியா விமானிகளின் வேலை நிறுத்தம் தொடர்வதால் நேற்று சென்னையில் மட்டும் 23 உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
ஏர் இந்தியா நிறுவன விமானிகள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 7-வது நாளாக அவர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது. இதனால் சென்னையில் விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கொழும்பு, சார்ஜா, துபாய், மஸ்கட், குவைத் ஆகிய நாடுகளுக்கு செல்ல வேண்டிய விமானங்களும், ஹைதராபாத், மதுரை, கொல்கத்தா, பெங்களூர், மும்பை, கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.












Click it and Unblock the Notifications