அயோத்தி தீர்ப்பு குறித்த சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு வக்பு வாரியம் வரவேற்பு
டெல்லி: அயோத்தி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு நடுநிலையானதாக இருக்கிறது என்று சன்னி வக்பு வாரிய வக்கீல் சபாரியாப் ஜிலானி வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இன்றைய உத்தரவு மிகவும் நடுநிலையானதாக, பொதுவானதாக இருக்கிறது. சர்ச்சைக்குரிய இடத்தில் எந்தவிதமான வழிபாடும் நடக்கக் கூடாது.
இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வர நெடுங்காலம் என்று பலரும் கருதுகிறார்கள். ஆனால் அவ்வளவு தாமதம் ஆகாது என்றே நாங்கள் கருதுகிறோம்.
பிரச்சினை குறித்தும், அதன் ஆழம் குறித்தும் நீதிபதிகளுக்கு நன்கு தெரியும் என்பதால் தாமதம் தவிர்க்கப்படும் என்று கருதுகிறோம்.
உயர்நீதிமன்ற தீர்ப்பு யாருக்குமே லாபகரமானதாக இல்லை. குறிப்பாக சன்னி வக்பு வாரியத்தின் கோரிக்கைகள், அது சமர்ப்பித்த ஆவணங்கள், ஆதாரங்கள் கருத்தில் கொள்ளப்படவே இல்லை.
உயர்நீதிமன்ற தீர்ப்பால் நாங்கள் மிகவும் ஆச்சரியமடைந்தோம், கடும் அதிருப்தியும் அடைந்தோம். தற்போது உச்சநீதிமன்றமும் அதை நிரூபித்துள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications