ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணை ஜூலை 31ல் முடியும்-சிபிஐ
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணையை ஜூலை 31ம் தேதிக்குள் சிபிஐ முடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மேலும் 2 குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஐ தரப்பில் கூறுகையில், விசாரணை அதிகாரிகளுக்குப் பெரும் பற்றாக்குறை உள்ளது. இதனால்தான் விசாரணையை இன்னும் முடிக்க முடியாமல் உள்ளது. இருப்பினும் ஜூலை 31ம் தேதிக்குள் விசாரணையை முடித்து விடுவோம் என்றனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே ராசா, கனிமொழி, ஷாஹித் பல்வா, ஆசிப் பல்வா, சஞ்சய் சந்திரா உள்ளிட்ட பலர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராசா உள்ளிட்ட சிலர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கனிமொழி உள்ளிட்ட சில முக்கியஸ்தர்கள் இன்னும் வெளியில் உள்ளனர்.
இதுவரை இந்த வழக்கில் 2 குற்றப்பத்திரிக்கைகளை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. மேலும் 2 குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications