சேலத்தில் அதிமுக பிரமுகருக்கு கத்திகுத்து: 3 பேருக்கு வலைவீச்சு
சேலம்: சேலத்தில் அதிமுக பிரமுகர் வெங்கடேசனை கத்தியால் குத்திவிட்டு தப்பிய 3 பேரை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
சேலம், சண்முகாநகரைச் சேர்ந்தவர் ஜிம்கிளி என்ற வெங்கடேசன் (40). அதிமுக பிரமுகர். அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
அவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அடையாளம் தெரியாத மூன்று பேர் போதையில் வந்து செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். வெங்கடேசன் பணம் தரமறுத்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் வெங்கடேசனை தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த வெங்கடேசன் சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதற்குள் போதை ஆசாமிகள் மூவரும் மொபட்டில் தப்பியோடிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications