அமெரிக்க தாக்குதலிலிருந்து தப்பிய ஒசாமா பின்லேடனின் மகன் எங்கே?

அமெரிக்கப் படையினர் பாகிஸ்தானின் அபோத்தாபாத்தில் உள்ள பின்லேடன் வசித்து வந்த வீட்டை முற்றுகையிட்டு அவனை சுட்டு வீழ்த்தியபோது, பின்டேனின் மகன்களில் காலித் என்பவர் சம்பவத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த சமயத்தில் அங்கிருந்த பின்லேடனின் இன்னொரு மகனான ஹம்சா என்பவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அவர் கொல்லப்படவில்லை, அமெரிக்கப் படையினரிடமும் சிக்கவில்லை. அதேபோல பாகிஸ்தான் படையினரிடமும் அவர் சிக்கவில்லை என்று தெரிகிறது.
ஹம்சாவின் தாயார், பாகிஸ்தான் படையினரிடம் சிக்கியுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது. ஆனால் ஹம்சா குறித்து யாரிடமும் தகவல் இல்லை.
அதேசமயம், பின்லேடன் உடலைத் தவிர வேறு யாருடைய உடலையும் தாங்கள் கொண்டு செல்லவில்லை. அதேபோல யாரையும் தாங்கள் பிடித்துச் செல்லவில்லை என்று அமெரிக்கா மறுத்துள்ளது.
ஒசாமா பின்லேடனுக்கு மொத்தம் ஐந்து மனைவிகள் உள்ளனர். அவருடைய பிள்ளைகள் தற்போது 18 பேர் என்று கூறப்படுகிறது. இவர்களில் ஹம்சா எத்தனையாவது குழந்தை என்பது தெரியவில்லை.
ஹம்சா தப்பியிருக்கலாம் அல்லது அவரை பாகிஸ்தான் படையினர் தங்கள் வசம் வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications