புதுக்கோட்டை அருகே வெடி விபத்தில் இருவர் பலி - மூன்று பேர் படுகாயம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே வெடி விபத்தில் இருவர் பரிதாபமாக பலியானார்கள். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்து உள்ளது அழகாபுரி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவர் இதே பகுதியில் வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளார்.
இந்த நிலையில் பொன்னழகி அம்மன் கோயில் திருவிழாவில் வாணவேடிக்கை நடத்த சுந்தரத்திற்கு ஆர்டர் கிடைத்தது.
இதனையடுத்து, கடந்த 9 ம் தேதி சுந்தரமும், வெடிகள் தயாரிக்கும் ஆலையில் வேலை செய்யும் ஆறுமுகமும் என்பவரும் வாணவேடிக்கைக்கு தேவையான சுந்தரம் வீட்டிற்கு வெடிகளை கொண்டு வந்தனர்.
பின்பு அவர்கள், வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திண்ணையில் வைத்திருந்த வெடிகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் சுந்தரத்தின் அண்ணன் மனைவி செல்வி (40) மற்றும் அவரது பேரன் பிரபாகரன் (10)ஆகியோர் அதே இடத்தில் உடல் சிதறி பலியானார்கள்.
மேலும் செல்வியின் மகன் சரவணன் (30), தங்கை யோகா, ஆறுமுகம் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த விபத்திற்கு காரணமான வெடிகள் தயாரிக்கும் ஆலை உரிமையாளர் சுந்தரத்தை போலீசார் கைது செய்தனர். மேலும், இது குறித்து திருமயம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications