ஸ்பெயினில் 5.2 ரிக்டர் நிலநடுக்கம்-10 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டின் தெற்குப் பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். பல கட்டடங்கள் தரைமட்டமாகின.
லோர்கா என்ற நகரில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.2 ரிக்டராக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 10 பேர் பலியானார்கள். பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
பலர் வீடுகள், கட்டடங்களை விட்டு வெளியே ஓடினர். பலர் ஓடும்போது கீழே விழுந்ததில் காயமடைந்தனர்.
ஒரு சர்ச்சில் இருந்த ராட்சத கடிகாரம் கீழே விழுந்து நொறுங்கியது. அப்போது தெருவில் போய்க் கொண்டிருந்த ஒரு டிவி நிருபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
நிலநடுக்கம் தாக்கிய பகுதி போர்க்களம் போலக் காணப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications