சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது-பலத்த பாதுகாப்பு

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்குத் தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை - ஒரு மின்னல் பார்வை:
- மொத்த தொகுதிகள்- 234
- வாக்கு எண்ணும் மையங்கள்- 91
- வாக்கு எண்ணும் பணியாளர்கள்- 16,966
- மத்திய பாதுகாப்புப் படையினர் எண்ணிக்கை- 45 கம்பெனி சிஆர்பிஎப் வீரர்கள்
- வாக்கு எண்ணும் மையத்திலிருந்து 100 மீட்டர் தொலைவிலேயே வாகனங்கள் அனைத்தும் தடை செய்யப்படும். கலெக்டராகவே இருந்தாலும் அதற்கு மேல் நடந்துதான் வர வேண்டும்.
- ஐடி கார்டைக் காட்டி விட்டுத்தான் மையத்திற்குள் நுழைய வேண்டும்
- வாக்கு எண்ணும் மையத்திற்குள் தண்ணீர் உள்ளிட்ட திரவப்பொருட்கள், மை அடைத்த பேனா, தீப்பெட்டி, சிகரெட், சிகரெட் பற்றவைக்கும் லைட்டர், செல்போன் போன்ற பொருட்களை உள்ளே கொண்டு செல்லக் கூடாது.
- வாக்கு எண்ணும் இடத்திற்குள் தேர்தல் பார்வையாளர் மட்டும் செல்போன் வைத்திருக்கலாம். மற்றவர்கள் யாரும் செல்போன் வைத்திருக்கக் கூடாது. அதே நேரத்தில், வாக்கு எண்ணும் மையத்திற்குள் பத்திரிகையாளர்கள், வேட்பாளர்கள், தலைமை ஏஜெண்டு, தேர்தல் அதிகாரி ஆகிய 4 தரப்பினரும் செல்போன் கொண்டு செல்லலாம்.
- ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்குகள் எண்ண 8 முதல் 14 மேஜைகள் போடப்பட்டிருக்கிறது.
- 8 மணிக்கு தபால் ஓட்டுக்கள் எண்ணும் பணி ஆரம்பமானது. 8.30 மணிக்கு பிற ஓட்டுக்கள் எண்ணப்படும். 9 மணியளவில் தான் முதல் சுற்று முடிவு தெரியவரும்.
- ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கையை சரி பார்த்த பின்னரே அடுத்த சுற்று தொடங்கும். கடைசி 2 சுற்று எண்ணுவதற்கு முன்பாகவே, தபால் ஓட்டு எண்ணிக்கை முடிவு அறிவித்தாக வேண்டும். அவ்வாறு அறிவிக்கப்படவில்லை என்றால் கடைசி இரு சுற்றுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
வாக்கு எண்ணும் மையங்களில் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக உள்பட அனைத்துக் கட்சித் தொண்டர்களும் குவிந்துள்ளனர்.
தமிழகம் தவிர கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அஸ்ஸாம் மாநிலங்களிலும் இன்று காலை சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.












Click it and Unblock the Notifications