For Daily Alerts
Just In
சட்டசபைத் தேர்தலில் பல அமைச்சர்கள் தோல்வி
சென்னை : சட்டசபைத் தேர்தலில் நிதியமைச்சர் அன்பழகன் உள்பட பல அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
துரைமுருகன் உள்ளிட்ட சிலர் மட்டுமே வென்றுள்ளனர்.
வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட அன்பழகன், அதிமுக வேட்பாளர் ஜேசிடி பிரபாகரனிடம் தோல்வியுற்றார்.
சங்ககிரி தொகுதியில் போட்டியிட்ட வீரபாண்டி ஆறுமுகம் படு தோல்வி அடைந்தார்.
அதேபோல எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கே.என்.நேரு, கேபிபி சாமி, சுரேஷ் ராஜன், வேலு, பொன்முடி ஆகியோரும் தோல்வியைத் தழுவினர்.
தா.மோ. அன்பரசன், உபயதுல்லா, கீதாஜீவன், செல்வராஜ், மதிவாணன் ஆகியோரும் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.
எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதியும் தோல்வியைத் தழுவினார்.
காட்பாடியில் துரைமுருகன் வெற்றி பெற்றார்.
Comments
English summary
Many DMK govt ministers including Anbalagan have been defeated in the polls. Notable ministers are:- Anbalagan, Veerapandi Arumugam, Parithi Ilamvazhuthi, Geetha Jeevan, Mathivanan, K.N.Nehru and Suresh Rajan.
Story first published: Friday, May 13, 2011, 19:42 [IST]