அதிமுக 'லீடிங்' வந்தால் சென்னையில் ஏசி பஸ்களை நிறுத்த உத்தரவு
சென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது அதிமுக அதிக இடங்களில் முன்னணியில் இருப்பதாக செய்திகள் வெளியானால் சென்னை நகரில் ஓடும் ஏசி டவுன் பஸ்களை நிறுத்தி விடுமாறு போக்குவரத்துக் கழகத்திற்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இதையடுத்து பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் மேற்கொண்டுள்ளது.
டிவி பெட்டிகள் அகற்றம்!
அதேபோல சென்னை மாநகர போக்குவரத்துக் கழகமும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதன்படி மாநகரில் உள்ள போக்குவரத்துக் கழக டிப்போக்களில் ஊழியர்களுக்காக வைக்கப்பட்டுள்ள டிவி பெட்டிகள் அகற்றப்பட்டு விட்டன. கேன்டீன், ஊழியர்கள் பணியாற்றும் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள டிவிகள் எடுக்கப்பட்டுள்ளன. முன்னணி மற்றும் வெற்றி நிலவரத்தைப் பார்த்து திமுக, அதிமுக ஊழியர்களிடையே மோதல் மூண்டால் டிவி பெட்டிகளைப் பாதுகாக்க முடியாது என்பதால் இந்த நடவடிக்கை.
'அரசியல் பேசாதீர்'
அதேபோல கேன்டீன், ஊழியர்கள் பணியாற்றும் பகுதிகள், டிப்போ வளாகங்களில் யாரும் அரசியல் பேசக் கூடாது என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்கள், குறிப்பாக அரசியல் கட்சிகளின் யூனியனைச் சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக நின்று பேசவும் தடை செய்யப்பட்டுள்ளதாம்.
ஏசி பஸ்களை நிறுத்த உத்தரவு!
இன்னொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிமுக அதிக இடங்களில் முன்னணியில் இருப்பதாக செய்திகள் வெளியானால் உடனடியாக மாநகரில் ஓடும் ஏசி பஸ்களை நிறுத்து விடவும் உதத்ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகுதான் சென்னை மாநகரில் அதிக அளவிலான ஏசி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் தற்போதைய வெயில் காலத்தில் இந்த பஸ்களுக்கு சரியான கலெக்ஷனும், கிராக்கியும் உள்ளது.
சென்னையில் அடையார் மற்றும் அண்ணா நகர் என இரு டிப்போக்களில் ஏசி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 102 ஏசி பஸ்கள் உள்ளன. இதில் இரண்டு பஸ்கள் தற்போது எப்.சிக்குப் போயுள்ளன. எனவே 100 பஸ்கள் (நேற்று இரவு நிலவரப்படி) ஓடி வருகின்றன.
திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஏசி பஸ்களுக்கு அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையினர் ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே அதிமுக வெற்றி பெறும் நிலை ஏற்பட்டால் ஊழியர்களில் சிலர் ஏசி பஸ்களை குறி வைத்துத் தாக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. எனவேதான் அதிமுக லீடிங்கில் இருப்பதாக செய்தி வெளியானால் ஏசி பஸ்களை நிறுத்தி விட்டு பத்திரப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications