கனிமொழி முன்ஜாமீன் வழக்கு மே 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி வந்தது குறித்து தற்போது சர்ச்சையாகியுள்ளது. இது ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்த பணம் என்பது சிபிஐயின் வாதம். ஆனால் இது கடன் என்றும், திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டது என்றும் கலைஞர் டிவி கூறி வருகிறது. இந்த வழக்கில் கூட்டுச் சதியாளராக கனிமொழி சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவர் சிபிஐ கோர்ட்டில் ஆஜரானார். அவருக்காக ராம்ஜேத்மலானி ஆஜரானார். கனிமொழி ஒரு பெண், தாய், எங்கும் ஓடி விட மாட்டார். அவருக்கு முன் ஜாமீன் தர வேண்டும் என்று வாதாடினார் ராம்ஜேத்மலானி. ஆனால், அவரை கைது செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சிபிஐ கோரியது.
இந்த வழக்கில் இன்றைக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று கனிமொழி மீண்டும் கோர்ட்டில் ஆஜரானார். அவருடன் கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் ஆஜரானார்.
அப்போது இந்த வழக்கில் தீர்ப்பை நீதிபதி சைனி வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
சட்டமன்றத் தேர்தலில் திமுக தமிழகத்தில் மிகப் பெரிய அடியை வாங்கியுள்ள நிலையில் கனிமொழிக்கு 20ம் தேதி வரை கொஞ்சம் அவகாசம் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications