பனைமர தொழிலாளர் நல வாரிய தலைவர் பதவியில் இருந்து குமரி அனந்தன் ராஜினாமா

Subscribe to Oneindia Tamil

மதுரை: பனைமர தொழிலாளர் நல வாரிய தலைவர் பதவியில் இருந்து குமரி அனந்தன் ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து பனைமர தொழிலாளர் நல வாரிய தலைவர் குமரி அனந்தன் அரசு செயலாளருக்கு அனுப்புள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது

நான் , சுதேசியத்தில் பற்றுக் கொண்டவன் என்ற காரணத்தினால் பனைமரத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் என்ற பொறுப்பை எனக்கு அளித்த தமிழக அரசுக்கு நன்றி செலுத்துகிறேன்.

ஒரு லிட்டர் ரூ 3.50 என்று விற்ற பதநீருக்கு பத்து ரூபாய் என்று விலையை உயர்த்தித் தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பனைமரத் தொழிலாளி, தான் மட்டுமே எடுத்துச் செல்லும் வகையில் கருவியொன்றை கனமற்ற உலோகத்தில் செய்ய வேண்டும்.

பனைச் செல்வம் பெருஞ்செல்வம். உடல் நலம் தரும் செல்வம். அதை வளர்க்கவும் நிற்கின்ற பனைகளைச் சிறந்த முறையில் பயன்படுத்தவும் மேற்கொண்டு பல திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்த வேண்டும்.

ஊதியம் இல்லாத வேலையினாலும் எளியோர்க்கும் நாட்டிற்கும் செய்யும் தொண்டாக மனநிறைவோடு அரசு தந்த பொறுப்பில் இருந்து பணியாற்றினேன்.

நான் பணியாற்றுவதற்கு உத்தரவு பிறப்பித்த அரசுக்கும், நான் பதவியில் இருந்த போது ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, இன்று அந்தப் பொறுப்பில் இருந்து விலக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ளதைத் தொடர்ந்து மரபுப்படி குமரி அனந்தன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+