கோவையில் தங்கபாலு கொடும்பாவியை எரித்து காங்கிரஸார் போராட்டம்
கோவை: தேர்தல் தோல்விக்கு காரணம் என காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் கொடும்பாவி தொண்டர்களால் எரிக்கப்பட்டது.
படுதோல்வி
திமுகவை உருட்டி மிரட்டி 63 சீட்டுக்கள் பெற்றது காங்கிரஸ். ஆனால், அந்த சீட்டுக்களினால் கட்சிக்கு எந்த பலனும் இல்லாமல் போய்விட்டது. மொத்தமே 5 தொகுதிகளில்தான் காங்கிரஸால் ஜெயிக்க முடிந்தது. காங்கிரஸின் முக்கிய புள்ளிகளே பெரும்பாலான தோகுதிகளில் மண்ணை கவ்வினர்.
தங்கபாலுவே காரணம்
இந்த படுதோல்விக்கு தமிழக காங்., தலைவர் தங்கபாலு, அகில இந்திய செயலாளர் குலாம்நபி ஆசாத் மற்றும் வீரப்ப மொய்லி ஆகியோர் தான் காரணம் என்ற ஆத்திரம் தமிழகமெங்கும் உருவாகியுள்ளது.
இவர்கள் மீது காங்கிரஸ் தலைவர் சோனியா, பொதுச் செயலாளர் ராகுல் ஆகியோர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோவை காந்திபுரத்தில் இளங்கோவன் ஆதரவாளர்கள் கூடினர்.
உருவ பொம்மை எரிப்பு
தங்கபாலுவிற்கு எதிராக கோஷமிட்ட அவர்கள், கையோடு கொண்டு வந்திருந்த தங்கபாலுவின் உருவ பொம்மையையும் எரித்தனர். இவர்களில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications