சட்டசபை தேர்தல்: காங்கி்ரசை காப்பாற்றிய கன்னியாகுமரி
குமரி: 63 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 5 இடங்களில் தான் வெற்றி பெற்றுள்ளது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 3 இடங்களில் வென்றுள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. திமுகவுடன் போராடி 63 இடங்களைப் பெற்றது.
பல்வேறு குழப்பம், உள்கட்சி பூசல்களுக்கிடையே தேர்தலை சந்தித்தது. போட்டியிட்ட 63 இடங்களில் வெறும் 5ல் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
இதில் தென்மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே 3 தொகுதிகளில் மக்கள் காங்கிரஸுக்கு கை கொடுத்து காப்பாற்றியுள்ளனர். இம்மாவட்ட மக்களும் காங்கிரஸை கை கழுவியிருந்தால் தமிழகத்தில் காங்கிரசின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியிருக்கும்.
இவர்களில் யாரும் எதிர்பாராத வெற்றி என்றால் அது விளவங்கோடு தொகுதியில் விஜயதரணி பெற்ற வெற்றிதான். முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யருக்கு மிகவும் நெருக்கமானவரான இவரை எதிர்த்து உள்ளூர் காங்கிரஸார் கடுமையாக குரல் கொடுத்து வந்தனர். ஆனால் அதையும் மீறி அவர் நல்ல வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார் என்பது ஆச்சரியமானது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் காங்கிரஸுக்கு 4 தொகுதிகளை திமுக கொடுத்திருந்தது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications