வெளிநாடு வாழ் இந்திய தம்பதிகள் வழக்கை இந்திய நீதிமன்றங்கள் விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம்

நீதிபதிகள் வி.எஸ். சிர்பர்கர் மற்றும் டி.எஸ். தாகுர் அடங்கிய பெஞ்ச் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
ஒரு வெளிநாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது என்பதற்காக இந்திய நீதிமன்றங்கள் அப்படியே அதை ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. மாறாக பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும்.
ஒரு மைனரின் நலன் குறித்து வெளிநாட்டு நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது என்பதற்காக இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் இந்த விவகாரத்தை விட்டுவிட வேண்டும் என்றில்லை. அப்படியே அந்த தீர்ப்பை கண்மூடித் தனமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நீதிபதி தாகுர் கூறியுள்ளார்.
வெளிநாட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பளி்க்கப்பட்ட வழக்கை இந்திய நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் ருச்சி மாஜூ என்ற பெண்ணின் வழக்கில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அதற்கு தான் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
அமெரிக்கா வாழ் இந்தியர்கள் சஞ்சீவ் மாஜு, அவரது மனைவி ருச்சி மாஜூ. அந்த தம்பதிகளுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு அது கலிபோர்னியா நீதிமன்றம் வரை சென்றது. அவர்களின் மைனர் மகன் தந்தை சஞ்சீவிடம் தான் இருக்க வேண்டும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து ருச்சி கடந்த 2008-ம் ஆண்டு தனது மகனை அழைத்துக் கொண்டு இந்தியாவுக்கு வந்துவிட்டார். இது குறித்து கலிபோர்னியா நீதிமன்றத்தில் சஞ்சீவ் வழக்கு தொடர்ந்தார். அந்த நீதிமன்றமும் ருச்சியை கண்டித்து நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் தான் ருச்சி தனது மகனை தன்னிடம் வைத்துக் கொள்ள அனுமதி கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். தாய், தந்தை, மகன் என மூன்று பேருமே அமெரிக்க குடியுரிமை உடையவர்கள் என்பதால் கலிபோர்னியா நீதிமன்றத்திடமே முறையிடுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
ருச்சி தனது கணவர் அடுத்த பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார். ஆனால் இதை சஞ்சீவ் மறுத்ததோடு கலிபோர்னியா நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ள வழக்கில் இந்திய நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து வெளிநாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தபோதிலும் இந்திய நீதிமன்றம் அந்த வழக்கை விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications