ஜெ தலைமையில் இன்று முதல் அமைச்சரவைக் கூட்டம்-அடுத்த வாரம் எம்எல்ஏக்கள் பதவியேற்பு?

இக் கூட்டத்தில் சட்டசபைக் கூட்டம், பட்ஜெட் தயாரிப்பு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.
முன்னதாக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா நேற்று மாலை சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு சென்று கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணியை தொடங்கிய நிலையில், 33 அமைச்சர்களும் இன்று கோட்டையில் தங்களது பணிகளைத் தொடங்கினர்.
புதிய அமைச்சர்களை சந்திக்க அவர்களது ஆதரவாளர்கள் திரண்டுள்ளதால், கோட்டையில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் ஜெயலலிதா தலைமையில் இன்று பகல் 2 மணிக்கு முதல் அமைச்சரவை கூட்டம் கூடியது. சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த இக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.
இதில் சட்டசபைக் கூட்டம், பட்ஜெட் தயாரிப்பு, தேர்தல் வாக்குறுதிகள் ஆகியவை குறித்த விவாதங்கள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையே புதிய அமைச்சர்களுக்கு இன்னும் வீடுகள் தயாராகததால் அவர்கள் சேப்பாக்கம் உள்ளிட்ட விருந்தினர் இல்லங்களில் தங்கியுள்ளனர்.
சட்டமன்றத்தை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதால் புதிய எம்எல்ஏக்கள் அடுத்த வாரம் பதவியேற்பார்கள் என்று தெரிகிறது.
தமிழக நிதி நிலவரம்-ஆளுநரிடம் தணிக்கைத் துறை அறிக்கை:
இந் நிலையில் தமிழகத்தின் 2009-10ம் ஆண்டு நிதி நிலவரம் குறித்த அறிக்கையை இந்திய தணிக்கைத் துறை ஆளுநர் பர்னாலாவிடம் வழங்கியது.
இந்த அறிக்கை சட்டப்பேரவையில் விரைவில் தாக்கல் செய்யப்படும். அரசியல் சட்டத்தின்படி, மாநில அரசின் கணக்குகள் குறித்த அறிக்கையை ஆளுநரிடம் தணிக்கைத் துறை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications