கரூர் - உர மோசடி வழக்கில் 4 முக்கிய அதிகாரிகளுக்கு ஜாமீன்
கரூர்: விவசாயிகளுக்கு வழங்கி வேண்டிய உரத்தை தனியார் நிறுவனங்களுக்கு விற்று பெரும் மோசடி செய்த வழக்கில் 4 முக்கிய அதிகாரிகளுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
திருச்சியிலுள்ள தமிழ்நாடு கூட்டுறவு சந்தையியல் கூட்டமைப்பு (டான்பெட்) நிறுவனத்திடமிருந்து தாந்தோன்றிமலை வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையத்தின் தனி அலுவலர் செல்லமுத்து உரங்களை விவசாயப் பணிகளுக்கு வழங்குவதற்காக மானிய விலையில் பெற்று, அவற்றை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து மோசடி செய்தார்.
இந்த ஊழல் குறித்து புகார் குறித்து உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி்ருச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா கோரியிருந்தார். ஆனால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. தாந்தோணி யூனியன் வேளாண்மை பொறியல் தனி அலுவலர் செல்லமுத்து மட்டும் சஸ்பெணட் செய்யபட்டார்.
இந்த நிலையில், தற்போது ஆட்சி மாற்றம் நடந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையத்தின் துணைப் பதிவாளர் பாக்கியநாதன், கரூர் வணிகவியல் குற்றப் புலனாய்வுத் துறையில் புகார் அளித்தார்.
அதன் பேரில், வணிகவியல் குற்றப் புலனாய்வுத் துறை தனிப் படை அமைத்து தாந்தோன்றிமலை அக்ரோ சர்வீஸ் முன்னாள் தனி அலுவலர் செல்லமுத்து (48),திருச்சி டான்பெட் துணை மேலாளர் பரமசிவம் (57), திருச்சி வேளாண்மைத் துறை உதவி இயக்குநராக இருந்த மீனாட்சிசுந்தரம் (53), கரூர் காகிதபுரத்திலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜகோபாலன் (53), உதவிப் பொது மேலாளர் கல்யாணசுந்தரம் (56) ஆகியோர் உள்பட 7 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜகோபாலன் (53), உதவிப் பொது மேலாளர் கல்யாணசுந்தரம் (56), பாலி்மர் லாறி அன் கோ பொது துணை மேலாளர்(பர்சேஸ்) முருகன், உதவி பொது மேலாளர்அனிமேஸ் சட்ட போத்தியா ஆகிய 4 பேருக்கு குளித்தலை நீதி மன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications