திருப்பூர் அருகே நில அதிர்வு: கல் குவாரிகள் காரணமா?
திருப்பூர்: மூலனூரில் ஏற்பட்ட நில அதிர்வு பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
மூலனூர்:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது மூலனூர். இதன் அருகே கிளாங்குன்றல், மூக்கு தரிச்சாம்பாளையம், வண்ணாபட்டி, மூவேந்தர் நகர், சின்னார வலசு, மேற்குபதி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இன்று காலை 6.40 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
நில அதிர்வு 15 வினாடிகள் நீடித்தது. அதிர்வின்போது வீட்டில் இருந்த பாத்திரங்கள் உருண்டன. நில அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்த பொது மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிக்கு ஓடி வந்தனர். சின்னார வலசு கிராமத்தில் சில வீடுகளில் ஓடுகள் சரிந்து விழுந்தது.
இரண்டாவது முறை:
கடந்த 2 மாதத்திற்கு முன்பும் மூலனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. பொது மக்களிடையே அச்சமும் பீதியும் ஏற்பட்டதால் தாராபுரம் ஆர்.டி.ஓ.அழகு மீனா, தாசில்தார் சாமியப்பன் ஆகியோர் சம்பவ இடங்களுக்கு விரைந்தனர்.
கல்குவாரிகள் காரணமா?:
நில அதிர்வு ஏற்பட்டால் சேலத்தில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் பதிவாகும். ஆனால் நில அதிர்வு ஏற்பட்ட அன்று அதிர்வு ஏதும் பதிவாகவில்லை. மூலனூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள் உள்ளன. அதிகாலை நேரங்களில் இந்த குவாரிகளில் வெடி வைத்து பாறைகளை தகர்ப்பது வழக்கம். அதன் காரணமாகவும் நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications