23ம் தேதி எம்எல்ஏக்கள் பதவியேற்பு: 27ல் சபாநாயகர் தேர்வு

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
புதிதாக தேர்வான எம்.எல்.ஏக்களுக்கு சட்டசபையில் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைக்கப்பட வேண்டும்.
சட்டசபை கூட்டத்தை புதிய கட்டிடத்தில் இருந்து மீண்டும் பழைய இடமான புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்த முடிவு செய்யப்பட்டதால் எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பு அடுத்த வாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை அரங்கை நிர்மாணிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணி ஓரிரு நாட்களில் இந்த பணி முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
14வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் மே 23ம் தேதி (திங்கட்கிழமை) பகல் 12.30 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பார்கள்.
மே 27ம் தேதி காலை 9.30 மணிக்கு சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் 3ம் தேதி காலை 10 மணிக்கு சட்டசபையின் முதல் கூட்டம் நடக்கும். அன்று கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா உரை நிகழ்த்துவார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications