கேரளா: புதிய எம்.எல்.ஏ.க்களில் 67 பேர் மீது கிரிமினல் வழக்கு, 35 பேர் கோடீஸ்வரர்கள்
திருவனந்தபுரம்: கேரளாவில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களில் 67 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மீது மட்டும் 5 வழக்குகள் உள்ளன.
சமீபத்தில் 5 மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தல் குறித்து கேரளாவைச் சேர்ந்த எலக்ஷன் வாட்ச் என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. தமி்ழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 31 சதவீத எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
இதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தான் அதிகம். புதுச்சேரி கிரிமினல் வழக்குகள் உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணி்க்கை குறைவு. ஐந்து மாநிலங்களிலும் 33 சதவீத எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள்.
கேரளாவில் 67 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கூட்டணியில் 40 பேர், மீதமுள்ள 27 எம்.எல்.ஏ.க்கள் இடதுசாரி கூட்டணியைச் சேர்ந்தவர்கள். 12 பேர் மீது கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன. காங்கிரஸ்எம்.எல்.ஏ.க்கள் அன்வர் சாதத், ஹைபி ஈடன் ஆகியோர் மீது அதிகபட்சமாக 15 வழக்குகள் உள்ளன. முஸ்லீம் லிக் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான முனீர் மீது 14 வழக்குகள் உள்ளன.
மார்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜெயராமன் மீது 10-ம், காங்கையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மீது 7 வழக்குகளும் உள்ளன. முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மீது 5 வழக்குகள் உள்ளன.
முதல்வராக பதவியேற்ற உம்மன் சாண்டி மீது ஒரேயொரு வழக்கு மட்டுமே உள்ளது. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களில் 35 பேர் கோடீஸ்வரர்கள். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications