எண்டோசல்பான் பாதிப்பு: வால்பாறையில் 16 பேர் மருத்துவமனையில் அனுமதி
வால்பாறை: வால்பாறையில் எண்டோசல்பான் பூச்சிக் கொல்லி மருந்தினால், 16 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எண்டோசல்பான்
உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்டு விட்ட பூச்சிக்கொல்லி மருந்து எண்டோசல்பான். இந்தியாவிலும் இதனை தடை செய்யக் கோரி தேசம் முழுவதிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில், கேரளத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு போராட்டங்களின் பயனாக, இந்தியாவில் 2 மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
எஸ்டேட் ஊழியர்கள்
வால்பாறையில் உள்ள தேயிலை தோட்டங்களில் எண்டோசல்பான் பயன்பாடு மிக அதிக அளவில் உள்ளது. வால்பாறை காஞ்சமலை எஸ்டேட்டில் உள்ள 2ம் எண் தேயிலைத் தோட்டத்தில் எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அதே, தோட்டத்தில் தேயிலை பறித்துக்கொண்டிருந்த 16 பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இவர்கள் கருமலை எஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வால்பாறை தாசில்தார் சின்னப்பையன் இது தொடர்பாக விசாரித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications