தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கும்: வானிலை ஆய்வு மையம்
திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவ மழை இந்தாண்டு எதிர்பார்த்ததை விட ஒரு சில நாட்கள் முன்னதாக மே மாத இறுதி வாரத்தில் தொடங்கக்கூடும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரம் தொடங்கி ஆகஸ்ட் வரை நீடிக்கும். இந்த ஆண்டு சில நாட்கள் முன்னதாகவே தொடங்க வாய்ப்பு உள்ளதாக திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மைய இயக்குனர் கே. சந்தோஷ் கூறியதாவது,
இந்த ஆண்டு மடகாஸ்கர் கடலோரப் பகுதிகளில் பருவ மழைக்கு முன்னோடியாக உருவாகும் உயர் காற்றழுத்த மண்டலம் வழுப்பெற்று வருகிறது. இதனால் வரும் 31-ம் தேதி கேரளாவில் பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளது.
4 நாட்கள் முன்பாகவோ அல்லது 4 நாட்கள் பி்ன்னரோ மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. மே 27 முதல் ஜூ்ன் 4-ம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் பருவ மழை தொடங்கும். இந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யும். கோடை மழையும் எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications