இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது

ஐந்து நட்சத்திர வசதிகள் கொண்ட சொகுசு சுற்றுலா கப்பல்கள் மேலை நாடுகளில் வெகு பிரசித்தம். ஆனால், இதுபோன்ற சொகுசு கப்பல்கள் இந்தியாவில் இதுவரை இல்லை. அதேவேளை, வெளிநாடுகளிலிருந்து அவ்வப்போது ஒரு சில கப்பல்கள் மட்டும் இந்தியா வந்து செல்கின்றன.
மேலும், இந்தியர்கள் சுற்றுலா கப்பல்களில் செல்ல வேண்டும் என்றால் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்றுதான் செல்ல முடிகிறது. இந்த குறையை போக்கும் வகையில், நாட்டின் முதல் சுற்றுலா சொகுசு கப்பலை சென்னையை சேர்ந்த அமீத் ஷிப்பிங் இந்தியா நிறுவனம் வாங்கியுள்ளது.
கிரிஸ் நாட்டை சேர்ந்த நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டுள்ள இந்த கப்பல் வரும் ஜூன் 8ந் தேதி சென்னை துறைமுகத்திற்கு வருகிறது. அன்று மறுநாள் முதல் தனது சுற்றுலா சேவையை துவங்க உள்ளது.
அமீத் ஷிப்பிங் நிறுவனத்தின் தலைவர் ராமச்சந்திரன் கூறியதாவது:
"இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் 80,000 பேர் சொகுசு கப்பலில் சுற்றுலா செல்கின்றனர். ஆனால், அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுதான் சொகுசு கப்பலில் செல்ல முடியும். இந்த குறையை போக்கும் வகையில், சொகுசு கப்பல் சேவையை துவங்க இருக்கிறோம்.
ரூ.100 கோடி மதிப்புடைய இந்த சுற்றுலா கப்பல் கிரிஸ் நாட்டிலிருந்து வாங்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் கட்டப்பட்டு 35 ஆண்டுகள் ஆகிறது. இதற்கு 'அமீத் மெஜஸ்ட்டி' என்று பெயரிட்டுள்ளோம்.
சென்னையிலிருந்து மும்பை, கொச்சி, கோவா, அந்தமான், புக்கட், மாலத்தீவு, கொழும்பு ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சேவை துவங்கப்பட உள்ளது.
சென்னை துறைமுகத்தில் சுற்றுலா கப்பல் நிறுத்துவதற்கான டெர்மினல் வசதி ஏற்கனவே உள்ளது. தவிர, கோவா, மும்பை, கொச்சி ஆகிய துறைமுகங்களில் ரூ.480 கோடியில் இந்த கப்பலை நிறுத்துவதற்கான டெர்மினல் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் 1,000 பயணிகள் செல்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த கப்பல் சுற்றுலா விரும்பிகளுக்கு நிச்சயம் புதிய அனுபவத்தை கொடுக்கும்," என்று கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications