லோக்பால் குழுவில் பெண்களை சேர்க்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: லோக்பால் சட்ட மசோதா வரைவு கூட்டுக்குழுவில் பெண்களையும் சேர்க்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து சென்னை வக்கீல் பழனிமுத்து தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
ஊழலுக்கு எதிரான சட்ட மசோதா கொண்டு வர மத்திய அரசு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் லோக்பால் சட்ட மசோதா வரைவு கூட்டுக்குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில் பெண்கள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரையும் பிரதிநிகளாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இது தவிர பிராந்திய அளவிலும் பிரநிதிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். நம் நாட்டில் 4ல் ஒரு சதவீதம் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரும், 50 சதவீத பெண்களும் உள்ளனர்.
லோக்பால் குழு வரும் 30-ம் தேதி கூடுகிறது. பெண்கள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரை சேர்க்காமல் இந்த கூட்டம் நடக்கக் கூடாது. எனவே, இந்த வழக்கு முடியும் வரை லோக்பால் குழு கூட தடைவிதிக்க வேண்டும்.
லோக்பால் குழுவை திருத்தி அமைக்குமாறு கடந்த 24-ம் தேதி மத்திய அரசுக்கு மனு கொடுத்தேன். அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறியிருந்தது.
இந்த மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications