தூங்கிக் கொண்டிருந்த கிராமத்தினர் மீது பெட்ரோல் குண்டுவீச்சு
மதுரை: திருமங்கலம் அருகே உள்ள கே.சென்னம்பட்டியில் திருவிழாவைப் பார்த்துவிட்டு தெருவோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகேயுள்ள உள்ளது கே. சென்னம்பட்டி.
இங்கு கடந்த இரண்டு நாட்களாக மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வந்தது. விழாவின் இறுதி நாள் இரவில் கோயிலின் எதிரில் உள்ள பள்ளி மைதானத்தில் நாடகம் நடந்தது.
நாடகம் முடிந்த பின்பு ஒரு தரப்பைச் சேர்ந்த 20 பேர் தங்களது தெருவில் உள்ள ஒரு மணல் மேட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் திடீரென பெட்ரோல் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அந்த குண்டு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது படவில்லை. மாறாக சாலையில் பயங்கர சத்தத்துடன் விழுந்தது. சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து எழுந்து அந்த இடத்தைவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து கள்ளிக்குடி காவல் நிலையத்தில் கள்ளிக்குடி விடுதலைச் சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் சவுரியப்பன் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின் பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மதுரை மாவட்ட எஸ்பி அஸ்ரா கார்க்கும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். பெட்ரோல் குண்டு வீசிய மர்ம மனிதர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications